Breaking
Fri. May 3rd, 2024

மட்டக்களப்பு, கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேணிநகர் 50 செமடசெவண வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 14.06.2019 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஹைதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி கலந்து கொண்டு அடிக்கல் நட்டார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, கிராம சேவை உத்யியோகத்தர் தேவேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர் , கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post