Breaking
Sat. May 4th, 2024
சமூகத்துக்காக தமது வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட சகோதரர் பஷீர் நியாஸ்தீனின் மறைவு தமக்கு கவலையளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
பஷீர் நியாஸ்தீனின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
“மர்ஹூம் பஷீர் நியாஸ்தீன், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அரசியலுக்காகவும் சமூகப் பணிகளுக்காகவும் செலவிட்டவர். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக விளங்கிய அவர், சமூகப்பற்றாளர் மட்டுமின்றி, மக்களின் துன்ப துயரங்களில் நேரடியாக களத்தில் நின்று பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர்.
 
குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் அரசியல்வாதியாக இல்லாமல், தேசிய ரீதியிலும் தனது கருத்துக்களை துணிவுடன் தெரிவித்தவர். அவர் ஒரு சிறந்த மேடைப்பேச்சாளர். சிரித்த முகத்துடன் எப்போதும் சுறுசுறுப்பாக உழைத்த அவர், மக்கள் பணிக்கு எப்போதுமே முன்னுரிமையளித்து வாழ்ந்து வந்தவர்.
அவரின் மறைவு செய்தியை கேள்வியுற்றவுடன், இன்று காலை பாணந்துறையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டேன்.
 
எல்லாம் வல்ல இறைவன் சகோதரர் பஷீர் நியாஸ்தீன் அவர்களைப் பொருந்திக்கொண்டு, அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு கழாக்கதிரைப் பொருந்திக்கொள்ளும் பக்குவத்தை வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.”

Related Post