Breaking
Mon. May 20th, 2024

தாய்லாந்தில் சிஅன்காமாய் என்ற நகரில் நடைபெறவுள்ள 2016 சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளவனர். இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான  விமான பயணச்சீட்டுக்களை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமீபத்தில் வழங்கினார். தேசிய ரீதியில் தகுதி பெற்ற அணித்தலைவர்கள் நான்கு பேருக்கும் 16 மாணவர்களுக்குமான விமான பயணச்சீட்டுக்கள் இதன் போது வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை தாய்லாந்தின் அடிப்படை கல்வி ஆணைக்குழுவின் புதிய கண்டுபிடிப்புக்கான கல்வி மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *