Breaking
Thu. May 16th, 2024

இன்று முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும் சீனியின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 12 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் சந்தையில் கிடைப்பதாலும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது சந்தையில் நிலவும் விலைகளில் எவ்வித மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *