Breaking
Sat. May 4th, 2024
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்குவரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அறிவித்தார்.
அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றருக்கான விலையை 20 ரூபாவாலும், பெற்றோல் விலையை 5 ரூபாவாலும், டீசல் விலையை 3 ரூபாவாலும் குறைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய கட்டமைப்புக்கு நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இணைக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *