Breaking
Thu. May 2nd, 2024
இந்­தி­யா­வுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது, அதற்குப் பதி­லாக வர்த்தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படவுள்­ள­தாக அர­சாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்­பாக சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல
தெரி­விக்கையில்,
இந்­தி­யா­வுடன் சீபா உடன்­ப­டிக்கை கைச்சாத்திடப்படப்  போவ­தா­கவும் இதனால் இலங்கையை இந்­தியா ஆக்­கி­ர­மித்­து­விடும் என்றும் பிர­சா­ரங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன. இதில் உண்­மை­யெ­து­வு­மில்லை.
இது தொடர்­பாக பிர­தமர் ரணில்­ விக்­கி­ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெளி­வான அறிக்­கை­யொன்றை விடுத்தார்.தனது இந்­திய விஜ­யத்தின் போது சீபா உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேசப்­ப­ட­வில்லை. அவ் உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படாது என்றும் தெரி­வித்தார்.
தேசப்­பற்று தொடர்­பாக பேசும் உதய கம்மன்­பில போன்றோர் எமது நாட்டுப் பிர­த­மரின் கருத்தை நம்­பாது வெளி­நா­டு­களில் கருத்­துக்­க­ளுக்கு முத­லிடம் வழங்­கு­கின்­றார்கள். இந்தியாவுடன் வர்த்­தக மற்றும் தொழில்­நுட்ப  உடன்­ப­டிக்­கையே கையெழுத்திடப்படவுள்ளது.இது தொடர்­பாக பேச்­சு­வார்த்­தை நடத்­தப்­பட்டும் வரு­கின்­றது.
எனவே இந்­தி­யா­வுடன் நட்­பு­றவை சீர்­கு­லைப்­ப­தற்கு உள் நாட்­டி­லுள்ள சில தீய சக்­திகள் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன என்று அவர் தெரிவித்தார்.
இதே­வேளை இலங்கை, இந்­தியா இடை­யே­யான (ETCA) வர்த்­தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை தொடர்­பான நகல் பெப்ரவரி மாதம் கையெழுத்திடப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *