Breaking
Sat. May 18th, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் ஊடாக ரூபா 02 மில்லியன் பெறுமதியான சுயதொழில் உதவி மானியம் புத்தளம் மாவட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு நேற்று (26) வழங்கி வைக்கப்பட்டது.

“திவியட உதான” சுய தொழில் உதவி திட்டத்தினால் தலா ஒருவருக்கு 50,000 ரூபாவுக்கு உட்பட்ட கைத்தொழில் இயந்திர உபகரணங்கள் புத்தளம், கல்பிட்டி, முந்தல், வனாத்தவில்லு, சிலாபம் மற்றும் மாதம்பை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 86 பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக எம்.எச்.எம் நவவி எம்.பி, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் புத்தளம் மாவட்ட பிரதி பணிப்பாளர் ரத்நாயக்க, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *