Breaking
Fri. May 3rd, 2024

– அப்துல்லாஹ் –

பொது இடங்களின் இலவச  WI-FI  (வை-பை) சேவையை வழங்கும் திட்டத்தின கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையின் செங்கலடி பொது நூலகத்தில் இலவச வை-பை சேவை புதனன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதாக நூலகர் கே. கார்த்தியாயினி தெரிவித்தார்.
நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இலவசமாக இன்ரநெற் தொடர்புகளை மேற்கொண்டு பயன்பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்குப் பல்கலைக் கழகம் அருகில் இருப்பதால் அங்கு கற்கும் அதிகளவான வறிய மாணவர்கள் தினமும் இந்த நூலகத்திற்கு வந்து வாசிப்பிலும் ஆய்விலும் தேடலிலும் ஈடுபடுகின்றார்கள்.
அவர்கள் இனிமேல் இங்கிருந்தவாறு இந்த இலவச இன்ரநெற் சேவை மூலம் சர்வதேச தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்று அதிக நன்மையடைய முடியும் என்றும்,செங்கலடி நூலகத்தில் சுமார் 5000 நூல்கள் உள்ளன. இந்த நூலகத்தை இலத்திரனியல் நூலகமாக மாற்றுவசதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கார்த்தியாயினி மேலும் தெரிவித்தார்.

புதனன்று இடம்பெற்ற நிகழ்வில் செங்கலடிப் பிரதேச சபையின் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை, செங்கலடி நூலகர் கே. கார்த்தியாயினி, நிருவாக அதிகாரி எஸ். மகேந்திரன், சனசமூக அபிவிருத்தி அதிகாரி இந்துமதி விமல்ராஜ், ஆறுமுகத்தான்குடியிருப்பு நூலகர் ரீ. ராணி ஆகியோரும் வாசகர்களும் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *