எ.எச்.எம்.பூமுதீன்
சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அனுசரணையில் எஸ்.எம்.எம் ஹூஸைன் நம்பிக்கை நிதியம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கவுள்ளது.
கா.பொ.த சாதரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வறிய மாணவர்களுக்கு இப்புலமைப் பரீசில் வழங்கப்படவுள்ளது.
இம்முறை 150 மாணவர்கள் இப்புலமைப் பரீசிலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாசார நிலைய மர்லின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் வனிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொள்கின்றார்.