ரவூப் ஹக்கீம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்தமுடிவுகளும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க கட்சி முடிவெடுத்துள்ளதாக தற்போது பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும். கட்சி ஆதரவாளர்களினதும், உயர்பீடத்தினதும் கருத்துக்களை அறிந்தபின்னரே கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். வதந்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.