Breaking
Tue. May 7th, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாத்தறையில் பங்கேற்ற இராணுவ வெற்றி நிகழ்வின்போது கல்லை வைத்திருந்ததாக கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் போது அவையவங்களை இழந்த கடற்படை வீரர்களை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிவந்த கடற்படை வீரர் ஒருவரின் கைப்பையில் இருந்தே கல் ஒன்று கைப்பற்றப்பட்டது.

எனினும் எவரோ தம்மீது பொறாமைப்பட்டு குறித்த கல்லை தமது கைப்பைக்குள் வைத்திருக்கலாம் என்று கடற்படைவீரர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரும் அவருடன் மற்றும் ஒரு கடற்படைவீரரும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு இன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *