Breaking
Mon. May 20th, 2024
A.R.A.பரீல் –

நாட்டில் பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­தூக்­காது நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காப்­பதே ஆட்­சி­யாளர்களின் கட­மை­யாக இருக்க வேண்டும். ஆனால், இலங்­கையில் மீண்டும் தீவி­ர­வா­தி­களின் ஆதிக்­கத்­துக்கு இட­ம­ளிக்­கப்­பட்டு வரு­கி­றது.

அதனால், நாட்டின் தேசிய பாது­காப்­பினை உறுதி செய்து பிரச்­சி­னை­களைத் தீர்க்­காதுவிடின் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று நண்­பகல் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

“பயங்­க­ர­வாத செயல்­களில் ஈடு­பட்­ட­தற்­காக கைது செய்­யப்­பட்டு சிறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பின் உறுப்­பி­னர்கள் தற்­போது அர­சாங்­கத்­தினால் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டு வரு­கி­றார்கள். இவ்­வாறு அக்­கை­திகள் விடு­தலை செய்­யப்­ப­டு­வதை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம்.

இல­கு­வான விசா நடை­மு­றை­க­ளினால் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் நாட்­டுக்குள் உட்­பி­ர­வே­சிக்­கின்­றனர். இவர்­களால் இங்கு அடிப்­ப­டை­வாதம், தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது.

தற்­போது எமது புல­னாய்வுப் பிரிவும் செய­லி­ழந்து காணப்­ப­டு­கி­றது. இதனால் தேசிய பாது­காப்­புக்கு எப்­போதும் சவால் ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு முத­லிடம் வழங்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சிறையிலிருந்தும் பிணையில் விடுதலை செய்வதால் எதிர்காலத்தில் நாடு பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும்” என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *