Breaking
Sat. Apr 27th, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த கருத்தை சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

பொருளாதார நிபுணராக விளங்கும் ஹர்ச டி சில்வா, ஜப்பானின் இலங்கைக்கான முதலீடுகள் யாவும் சிறப்பான பயன்களை தருபவையாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனாவிடம் பெற்ற கடன்களுக்காக 6.5 வீத வட்டியை செலுத்த வேண்டியுள்ளது.

எனினும் ஜப்பானின் முதலீடுகளை பொறுத்தவரையில், அது இலங்கைக்கு நிதியுதவியின் அடிப்படையிலேயே முதலீடுகளை மேற்கொள்வதாக ஹர்ச தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நீண்டகாலமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவி வருகிறது. எனினும் புதிய வருகையாளரான சீனா அதற்கு ஈடாக செயற்பட முனைகிறது.

இதன்காரணமாகவே ஜப்பான் இலங்கை விடயத்தில் சில காலம் அக்கறையை வெளிப்படுத்தாமல் இருந்தது என்றும் ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *