Breaking
Tue. May 21st, 2024

ஜேர்­ம­னியின் பெர்­லின் நடை­பெற்ற தேர்­தலில் ஜேர்­ம­னிய சான்சலர் ஏஞ்­சலா மேர்­கலின் கிறிஸ்­தவ ஜன­நா­யக கூட்­டணி வர­லாற்று  தோல்­வி­யடைந்­துள்­ளது.

ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்­சலா மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணியானது, 17.6 சத­வீத ஆத­ர­வையே பெர்லின் தேர்­தலில் பெற்­றுள்­ளது.

இத­னி­டையே வலது சாரி குடியேறிகள் எதிர்ப்பு கட்சியான எ.எவ்.டி 14 ச­த­வீ­த மக்களின் ஆதரவை வென்றிருக்கிறது.

இதனால், பெர்லின் உட்பட மொத்தமுள்ள 16 பிராந்திய நாடாளுமன்றங்களில் 10இல் அதற்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.

பொது தேர்தல்களுக்கு ஓராண்டுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட குடியேறிகளை ஏற்றுக்கொள்ளும் ஏஞ்­சலா மேர்கலின் கொள்கையானது, பொது மக்களிடன் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *