Breaking
Thu. May 16th, 2024
நீதி­மன்ற அவ­ம­திப்பு மற்றும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்த குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்து சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விசேட அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் விடிவெள்ளிக்குத் தெரி­வித்தார்.
இந்த விடயம் தொடர்பில் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜெப்ரி அழ­க­ரட்­னத்தை நேரில் சந்­தித்து தான் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் மேலும் தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விடி­வெள்­ளிக்கு கருத்து வெளி­யி­டு­கையில்,
ஞான­சார தேரர் கடந்த பல வரு­டங்­க­ளாக பல்­வேறு வழி­க­ளிலும் அச்­சு­றுத்­த­லாக விளங்கி வரு­கிறார். ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் புகுந்து பௌத்த பிக்­குவை அச்­சு­றுத்­தினார்.
பின்னர் அமைச்­சரை அச்­சு­றுத்­தினார்.
இப்­போது நீதி­ப­தியை அச்­சு­றுத்­தி­யி­ருக்­கிறார். நீதித்­து­றையை அவ­ம­திக்கும் வகையில் தொட­ராக பகி­ரங்­க­மாக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கிறார்.
இது தொடர்பில் இந்த நாட்டின் அதி­காரம் வாய்ந்த சட்ட நிறு­வனம் என்ற வகையில் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விசேட அவ­தானம் செலுத்த வேண்டும். மட்­டு­மன்றி இதனைக் கண்­டித்து உட­ன­டி­யாக அறிக்கை ஒன்றை வெளி­யி­டு­வ­துடன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் விசேட மனு ஒன்­றையும் தாக்கல் செய்ய வேண்டும்.
அத்­துடன் இந்த வழக்கில் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் பிர­தி­நி­திகள் நேரில் ஆஜ­ரா­கவும் வேண்டும்.  தொடர்ச்­சி­யாக அச்­சு­றுத்தல் விடுத்தும் இவ­ருக்கு தண்­டனை பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் என்று நான் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜெப்ரி அழ­க­ரட்­னத்தை நேரில் சந்­தித்து வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளேன்.
இந்த வேண்­டுகோள் தொடர்பில் உடன் கவனம் செலுத்­து­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்தார். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­திற்கு இந்த விட­யத்தை எடுத்துச் செல்­வது தொடர்பில் சாத­க­மாக ஆலோ­சிப்­ப­தா­கவும் அதற்குத் தேவை­யான சட்­டத்­த­ர­ணி­களை தமது அமைப்பு சார்பில் நிய­மிக்க முடியும் என்றும் அவர் என்­னிடம் தெரி­வித்தார்.
ஏற்­க­னவே சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலை­வ­ராக உபுல் ஜய­சூ­ரிய பதவி வகித்த சமயம், அளுத்­கம சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு சங்­கத்தின் சார்பில் துணிச்­ச­லுடன் செயற்­பட்­ட­தையும் நான் இப்­போ­தைய தலைவர் ஜெப்ரி அழ­க­ரட்­னத்­திடம் சுட்­டிக்­காட்­டினேன்.
உபுல் ஜய­சூ­ரிய சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் நிறை­வேற்றுக் குழுவில் அங்கம் வகிப்­பதால் இந்த விட­யத்தை அவ­ரது கவ­னத்­துக்கும் கொண்டு சென்­றுள்ளேன். அவரும் இது தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார் என்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் மேலும் தெரி­வித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *