தம்புள்ள ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ள குண்டுத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது கட்டார் சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.