Breaking
Sun. May 5th, 2024

குறித்த விஜயமானது இன்று (07) ஞாயிற்றுக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை துறை முக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் துறை முக அதிகார சபைக்கு சொந்தமான மக்களின் குடியிருப்பு காணிகள் விடுவிப்பு, வேலை வாய்ப்பு, துறை முக விஸ்தரிப்பு, கைத்தொழில் ஊக்குவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பிரதி அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.

கப்பல் துறை கிராமத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் உடனடியாக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு  உயரதிகாரிகளை பிரதி அமைச்சர் பணித்தார்.
துறை முக அபிவிருத்தி ஊடான வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் புதிய திட்டங்களை நடை முறைப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க, முகாமைத்துவ பணிப்பாளர் அதுல ஹேவ விதாரண, திருகோணமலை துறை முக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் கே.ஏ.கே.என்.டபிள்யூ வீரசிங்க மற்றும் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, ஒருங்கிணைப்புச் செயலாளர்களான எஸ்.எம்.றிபாய்,எம்.பி.எம்.முஸ்தபா ,இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டார்கள்.

Related Post