Breaking
Sun. May 19th, 2024

துருக்கியில் 42 ஊட­க­வி­ய­லாளர்ளைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித் துள்ளதாக  துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கைது பட்டியலில்,  துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்லி லிகக் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாத ஆரம்­பத்­தில், துருக்கியில் தோல்வியடைந்த இரா­ணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர் ஆயிரக்கணக்கான கைது நடந்தன.

இத­னி­டையே மக்கள் விரும்­பினால் தூக்கு தண்­ட­னைக்கு ஆதர­வ­ளிப்­ப­தாக துருக்கிய ஜனா­தி­பதி எர்­டோகன் தெரி­வித்­தி­ருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றியம், துருக்கியில் மீண்டும் மரணதண்டனை கொண்டுவரப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினராக  சேர நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்படும் என அதன் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *