Breaking
Wed. May 8th, 2024
தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பெளசுல் அக்பர் பள்­ளி­வா­சலின் கட்­டிட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்த அனு­மதிப் பத்­தி­ரத்தை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை இரத்துச் செய்­துள்­ளது.
நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சட்­டத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தினால் இதனை இரத்துச் செய்­துள்­ள­தாக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை ஆணை­யா­ள­ருக்கு அறி­வித்­துள்­ளது.
தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் வீடொன்­றினுள் முஸ்லிம் பள்­ளி­வாசல் இயங்கி வரு­வ­தாக அப்­பி­ர­தேச மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த முறைப்­பா­டுகள் தொடர்பில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை விசா­ர­ணைகள் நடத்­தி­யது.
அங்கு சமயப் பாட­சாலை ஒன்று இயங்­க­வில்லை என்று விசா­ர­ணை­களின் போது உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து கட்­டிட நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெஹி­வளை கல்­கிசை மாந­க­ர­சபை ஆணை­யாளர்  தம்­மிக்க முத்­து­கல தெரி­வித்தார்.
இதே­வேளை நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை கட்­டிட நிர்­மாண அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்துச் செய்­தாலும் இது தொடர்­பாக சம்பந்­தப்­பட்ட அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யாடி கட்­டிட நிர்­மா­ணத்­துக்­கான அனு­ம­தியைப் பெற்றுக் கொடுக்­க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.
கொழும்­பி­லுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் ‘விடி­வெள்ளி’ எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே ஆணை­யாளர் தம்­மிக்க முத்­து­க­லவும் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் மேற்­கு­றிப்­பிட்ட விளக்­கங்­களை வழங்­கினர்.
அமைச்சர் பைசர் முஸ்­தபா தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்,
பாத்யா மாவத்­தையில் ஒரு சம­யஸ்­த­லமே நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. மக்­களை  நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்கும், நற்­செ­யல்கள் புரி­வ­தற்­குமே மதஸ்­த­லங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இது தொடர்­பான விளக்­கங்­களை ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­விடம் முன்­வைக்­க­வுள்ளேன்.
இது ஒரு தவ­றான கட்­டி­ட­மல்ல, எமது நாட்டின் அனைத்து இன­மக்­களும் நல்­லி­ணக்­கத்­துடன் வாழ­வேண்டும். தேசிய ஒரு­மைப்­பாடும், நல்­லி­ணக்­க­முமே எமது இலக்­காகும். எனவே பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் தொடர்பில் அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்வேன் என்றார்.
தெஹி­வளை – கல்­கிஸை மாந­க­ர­சபை ஆணை­யாளர் விளக்­க­ம­ளிக்­கையில், பத்யா மாவத்­தையில் ஒரு சமயப் பாட­சாலை நிறு­வு­வ­தற்­கா­கவே சுமார் 10 வரு­டங்­க­ளுக்கு முன்பு கட்­டிட நிர்­மா­ணத்­துக்­கான அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது.
அதன் பின்பு இந்தக் கட்­டிட விஸ்­த­ரிப்­புக்­காக விண்­ணப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து 2015 ஆம் ஆண்டு KBP/143/2015 எனும் இலக்­கத்தில்  அதற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது.
இதே­வேளை இந்த பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு எதி­ராக பிர­தேச மக்கள் குரல் கொடுத்­தி­ருந்ததால் முன்னாள் தெஹி­வளை –கல்­கிசை மேயர் தன­சிறி அம­ர­துங்க கடந்த மே மாதம் 30 ஆம் திகதி விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு தற்­கா­லிக தடை­வி­தித்­தி­ருந்தார்.
இத­னை­ய­டுத்து நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை விசா­ர­ணை­களை நடாத்தி கட்­டிட நிர்­மாண அனு­ம­தியை இரத்துச் செய்­துள்­ளது என்றார்.
நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் பணிப்­பாளர் நாயகம் எஸ்.எஸ்.பி.ரத்­நா­யக்க பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கு ஒரு பிர­தியும் அனுப்பியுள்ளனர். தெஹி­வளை கல்­கிசை மாந­க­ர­சபை ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள 2016.06.29 ஆம் திக­தி­யி­டப்­பட்ட கடி­தத்தில் பின்­வ­ரு­மாறு தெரிவித்துள்ளார்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையினால் வழங்கப்பட்டுள்ள KBP/143/2015 ஆம் இலக்க அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆவணங்களைக் கொண்ட கோவை பரீட்சிக்கப்பட்டது.
முறைப்பாட்டுக்காரர்கள் பாரிய நகரம் மற்றும் அபிவிருத்தி அமைச்சுக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இதன்பின்பே அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *