Breaking
Sun. Apr 28th, 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறி விப்பு உத்தியோகபூர்வமாக வெளி யான பின்னரே, எதிரணியின் சார்பில் களமிறங்கவுள்ள பொதுவேட்பாளர் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இத னைக் கூறியுள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அடுத்த வருடம் நடைபெறும் என்று ஜனாதி பதியே கூறி வருகிறார். இது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தற்போது இந்தத் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்ற போது, தேர்தல் அறிவிப்பு வெளியான தன் பின்னர் தங்களின் செயற் பாடுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப் படும்.
தேர்தலுக்கான எதிர்கட்சியின் வளங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது.எனவே, தேர்தல் அறிவிப்பின் பின்னரே பொது வேட்பாளர் குறித்தும் அறிவிக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *