Breaking
Sun. May 19th, 2024

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டதாக தெரிவித்து மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டவர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களை கைது செய்த கட்டுநாயக்க பொலிசார் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான சேகர் குசைன் வழங்கிய தகவலுக்கு அமைய, மொஹமட் குசையின், மொஹமட் சுலைமான் இருவரும் கடந்த மே மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றுக்கு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே இவர்களிடம் விசாரணை நடத்தும் பொருட்டு இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மலேஷியாவிடம் கோரிக்கைவிடுத்ததது. எனினும் அதனை மலேஷியா நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *