Breaking
Mon. May 20th, 2024

முஸ்­லிம்­களின் நலனில் என்றும் அக்­கறை கொண்­டவன் நான். முஸ்­லிம்கள் நீங்கள் இந்த புனித ரம­ழானில் நோன்பு நோற்றுக் கொண்டு கேட்கும் துஆ பிரார்த்­த­னை­களை இறைவன் அங்­கீ­க­ரிக்­கிறான்.

நோன்பு பிரி­வினை, சூழ்ச்சி, குரோதம், கெட்ட குணங்கள் என்­ப­வை­களை உங்­க­ளி­லி­ருந்தும் அகற்­றி­வி­டு­கி­றது. முஸ்­லிம்கள் நீங்கள் துவேசம், குரோ­த­மற்ற நாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு நிச்­சயம் உதவி செய்­வீர்கள் என நம்­பு­கிறேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

பொதுத் தேர்­தலில் ஐ.ம.சு.கூட்­ட­மைப்பில் குரு­நாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பு­ம­னுவை தாக்கல் செய்­வ­து­விட்டு அவர் குரு­நாகல் நக­ரி­லுள்ள மஸ்­ஜிதுல் ஜாமியுல் அஸ்­ஹரில் முஸ்­லிம்­களைச் சந்­தித்தார்.

பள்­ளி­வா­சலில் தன்னை வர­வேற்ற மக்கள் முன்­னி­லையில் உரை­யாற்­று­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் முஸ்­லிம்கள் இந்­நாட்டின் தேசிய ஒற்­று­மைக்குப் பாடு­பட்டு வந்த ஒரு சமு­தாயம். தேசிய நல­னிலும் அக்­கறை கொண்ட சமு­தாயம். இந்த சமூகம்  எதிர்­கா­லத்­திலும் இந்­நாட்டின் தேசிய ஒற்­று­மைக்குத் தொடர்ந்தும் பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும்.

நோன்பு காலத்தில் நீங்கள் செய்யும் பிரார்த்­த­னைகள் இறை­வனால் ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

நோன்­பினால் பாவங்கள் மறைந்து புனி­தர்­க­ளாக இருக்கும் உங்­க­ளது பிரார்த்­த­னைகள் நாட்டை நேர்­வ­ழியில் இட்டுச் செல்­லட்டும் எனக்­காக நீங்கள் செய்த துஆ பிரார்த்­த­னை­க­ளுக்கு எனது மன­மார்ந்த நன்­றிகள் என்றார். துஆ பிரார்த்­த­னையை மௌலவி ஹாரிஸ் நடாத்­தினார்.

நிகழ்வில் பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைத் தலைவர் அஹமட் தஹ்லான் முன்னாள் அமைச்­சர்­க­ளான ஜோன்ஸ்டன் பர்­ணாந்து, அநுர பிரி­ய­தர்­சன யாப்பா, ஜயரத்ன ஹேரத், ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் சார்பில் நகீப் மௌலானாவும் கலந்து கொண்டனர்.

-Vidivelli-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *