Breaking
Sat. May 4th, 2024

ஜனா­தி­ப­தியின் புதல்­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ உப ஜனா­தி­பதி போன்று செயற்­ப­டு­வ ­தாக குற்றம் சாட்­டி­யுள்ள மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ஹிருணிகா பிரே­மச்­சந்­திர அமைச்­சர்கள் பலர் அவரை “சேர்” என அழைத்த சந்­தர்ப்­பங்­களும் உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.எதிர்க்­கட்சித் தலைவர் காரி­யா­லயத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­கவி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது சமூக வலைத்­த­ளங்­களை பார்க்கும் போது இளைஞர், யுவ­திகள் அர­சியல் ரீதி­யாக தெளிவான நிலையில் இருக்­கின்­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யா­கின்­றது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலை விடவும் இம்­ முறை 95சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான இளைஞர், யுவ­தி­க­ளுக்கு உண்மை நிலைமை புரிந்­துள்­ளது. அத்­துடன் அவர்கள் அர­சாங்­கத்தின் மாயைக்குள் வீழ்ந்­தி­ருக்­க­வில்லை என்­பது புலப்­பட்­டுள்­ளது.அர­சாங்கம் என்­பது வேறு. அரச நிறு­வ­னங்கள் என்­பது வேறு. அரச நிறு­வ­னங்கள் மக்கள் சார்­பாக செயற்­ப­டு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டதே தவி­ரவும் மாறும் அர­சாங்­கங்­க­ளுக்­கேற்ப செயற்­ப­டு­வ­தற்கு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் தற்­போது பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் அர­சாங்க நிறு­வ­னங்­களின் பிர­தான கணக்­கா­ளர்­க­ளுடன் விசேட சந்­திப்­பொன்றை ஏற்­பாடு செய்து அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்­க­ளுக்­கான செல­வீ­னத்தைக் குறைத்து திறை­சேரி நிதி யை ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கென மீதப்­ப­டுத்­து­மாறு கூறி­யுள்­ளார். இவ்­வா­றான செயற்­பா­டொன்று கடந்த காலங்­களில் இடம்­பெற்­றி­ருக்­கவில்லை. பல வரு­டங்­க­ளாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் செயற்­பட்ட அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் 2010ஆம் ஆண்டு தெரிவு செய்­யப்­பட்ட அமைச்­சரின் கீழ் இருக்கும் பொரு ­ளா­தார அமைச்­சிடம் வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக கோர­வேண்­டிய சோக நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

இம்­முறை தேர்தல் அறி­விப்பைச் செய்­த­பின்னர் ஜனா­தி­பதி எம்­முடன் அல­ரி­மா­ளி­கையில் கலந்­து­ரை­யா­டினார். தேர்தல் தொடர்­பாக கூறி­ய­போது எந்த ஒரு அமைச்­சரும் வாய்­தி­றக்­காது மௌன­மா­கவே இருந்­தனர். தொடர்ந்து எனது அரு­கி­லிருந்த ராஜித சேனா­ரட்ன கடந்த தேர்தல் அறி­விக்­கப்­ பட்­ட ­போது அனை த்து அமைச்­சர்­களும் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்தி ஆர­வா­ரித்­தி­ருந்­ததாக கூறினார்.ஜனாதி­பதியே உங்­க­ளு­டைய பிரச்­சி­னையை கூறுங்கள் எனக்­கோ­ரிய­ போதும் அவ­ருக்கு முன்னால் தமது கருத்­துக்­களை முன்­வைக்­காது இருந்­தனர். காரணம் அவர் கள் அச்­சத்­துடன் இருக்­கின்­றார்கள்.

இன்று இளைய சமு­தாயம் பற்றி நாம் சிந்­தித்தால் இந்த நாட்டில் ஒரே­யொரு இளைஞர் மட்­டுமே இருக்­கின்றார். அவர் வேறு யாரு­மல்ல நாமல் ராஜபக்ஷ. இவர் பல்வேறு தீர்மானங்களை எடுப்பார். ஜனாதிபதி எடுக்க வேண்டிய முடிவைக் கூட எடுப்பார். ஏறக்குறைய உப ஜனாதிபதி போன்றே செயற்படுகின்றார். பல அமைச்சர்கள் அவரை “சேர்” என அழைத்த சந்தர்ப்பங்களை நான் நேரில் கண்டுள்ளேன் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *