Breaking
Wed. May 15th, 2024

தேசிய அர­சாங்­கத்­தின்­ சீ­ருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல் ­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளிலும் வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா கல்வி அமைச்­சர்­ அ­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரிவித்தார். கல்வி அமைச்­சி­னால் ­வெளியி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்கை ஒன்­றி­லேயே கல்வி அமைச்­சர்­ மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கை­யில் ­மே­லும் ­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

தேசிய அர­சாங்­கத்­தி­னால்­ அ­றி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நாட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அர­சாங்­கப் ­பா­ட­சா­லை­க­ளில் ­கல்வி பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்கு சீருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல்­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளில்­ வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.450 ரூபா முதல் 1000 ரூபா வரை­யி­லான வவுச்­சர் ­வ­கை­களை பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு இம்­முறை 26,000 மில்­லி­யன்­ ஒ­துக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கை­யில் ­நாளை 1ஆம் திகதி முதல் சகல பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு இந்த வவுச்­சர்­கள்­ அ­னுப்­பி­ வைக்­கப்­ப­டும் ­கு­றிப்­பிட்ட இந்த வவுச்சர் அதி­பர்­கள் ­ஊ­டாக வகுப்­பா­சி­ரி­யர்­க­ளிடம் சென்று மாண­வர்­க­ளுக்கு சென்­ற­டையும். தமது பிர­தே­சத்தில் வலயக் கல்விப் பணிப்­பா­ள­ரினால் பதிவு செய்­யப்­பட்ட வர்த்­தக கடை­களில் சீரு­டை­களை கொள்­முதல் செய்ய முடியும். மிகுதி பணம்­கி­டைக்­கு­மா­யின் ­மா­ண­வர்­கள்­ த­மக்கு ஏற்­ற­வா­றான எத­னையும் பெற்று கொள்ள முடியும்.

விநி­யோ­கிக்­கப்­படும் வவுச்­சர்கள் மாண­வர்­களின் வயதுக்கு ஏற்­ற­வாறு 15 வகை­க­ளில்­வ­ழங்­கப்­ப­ட­வுள்­ளது. அந்­த­வ­கையில் 1–5 மாண­வர்கள் 450 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் 400 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் முஸ்லிம் பாட­சாலை பர்தா தலைக்­க­வசம் 600 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் சீருடை 720 ரூபா வவுச்சர், 6–9 மாண­வர்கள் மேற்­சட்டை மற்றும் காற்­சட்டை 525 ரூபா வவுச்சர், 6–9 மாண­வி­யர்கள் 500 ரூபா வவுச்சர், 6–9 முஸ்லிம் வவுச்சர், மாண­வி­யர்கள் 700 ரூபா வவுச்சர், 6–9 மாண­வி­யர்கள் சீருடை 800 வவுச்சர்,

10–13 மாண­வர்கள் 525 ரூபா வவுச்சர், 10–13 மாண­வர்கள் 525 ரூபா வவுச்சர், 10–13 மாண­வி­யரின் துணிக்­காக 600 வவுச்சர், 10–13 முஸ்லிம் மாண­வி­யர்கள் 800 ரூபா வவுச்சர், 10–13 மாண­வி­யர்கள் 1000 ரூபா வவுச்சர், 1–7 காவி உடை 1300 ரூபா வவுச்சர், 8–13 மாண­வர்கள் 1700 ரூபா வவுச்சர், ஆகிய அடிப்ப­டை­யி­லேயே இந்த வவுச்­சர்கள் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இலங்­கையில் உள்ள 43 இலட்சம் மாண­வர்­க­ளது சீருடைகள் விடயத்தில் கடந்த காலத்தில் 4 நிறுவனங்கள் பாரிய நிதி மோசடிகளை செய்தது. இதனை இலகுபடுத்தும் திட்டமாகவே பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை அனைவரும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க இச்செயற்றிட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *