Breaking
Tue. Apr 30th, 2024

2024 ஆம் புதிய கல்வி ஆண்டின் முதலாம் தரத்திற்கு இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்று, மகிழ்விக்கும் நிகழ்வு, நிந்தவூர், அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எம்.ரி.நெளபல் அலி தலைமையில் இன்று (06) இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் கலந்துகொண்டதுடன், கெளரவ அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.றியாஸ் ஆதம் மற்றும் பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் ஏ.எல்.நிசாமுதீன் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related Post