ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.