Breaking
Wed. May 15th, 2024

திய அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சில விட­யங்கள், புதிய தேர்தல் முறை மற்றும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­டு­கின்­றமை முஸ்லிம் சமூ­கத்தை வெகு­வாகப் பாதிக்­கு­மெ­னவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி நல்­லாட்­சிக்கு பங்­க­ளிப்பு செய்த முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்­புகள் ஏற்­ப­டாத வண்ணம் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் வேண்­டி­யுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடை­பெ­ற­வுள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சி­க்கா­லத்தில் பொது­ப­ல­சே­னாவின் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளினால் முஸ்லிம் சமூகம் பல இன்­னல்­க­ளுக்­குள்­ளா­னது.

இதி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­தற்­கா­கவே முஸ்லிம் சமூகம் ஆட்சி மாற்­றத்­துக்குப் பங்­க­ளிப்புச் செய்து நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக கார­ண­மாக இருந்­தது.

இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரும் சில நட­வ­டிக்­கைகள் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்தை பாதிப்­ப­வை­யாக அமைந்­துள்­ளன. தொகு­தி­வாரி தேர்தல் முறை அமுல்­ப­டுத்­தப்­பட்டால் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அது பெரிதும் பாதிக்கும்.

இதற்கு சிறு­பான்மைக் கட்­சி­களும் சிறு­கட்­சி­களும் அதி­ருப்­தியைத் தெரி­வித்­துள்­ளன. நாம் ஒன்­றாக இணைந்து இதற்­காகக் குரல்­கொ­டுக்­கிறோம். அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். அர­சாங்கம் மாற்று வழி தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது.

அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், மனோ­க­ணேசன் ஆகியோர் எமக்கு ஆத­ரவு வழங்கி வரு­கி­றார்கள். இதற்­காக நாம­னை­வரும் ஒன்­றி­ணைந்து குரல் கொடுக்­க­வுள்ளோம்.

மீண்டும் நாட்டில் இன­வாத செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் முஸ்லிம் கட்சிகளும் சிறு கட்சிகளும் பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டியது அவசியமாகும்.

வில்பத்து விவகாரம் இனவாதமாக நோக்கப்பட்டு வருகிறது.

இதற்கெதிராகவும் நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *