Breaking
Wed. May 8th, 2024

ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்தை மியான்மரில் 1956ல் பரவ செய்தனர் புத்த இனவாத குழுவினர் இதன் விளைவாக அந்நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது . 1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர் .அதேபோல் 1996 இல் ஏராளமான பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சியமைப்புக்கு மாறியபோது மீண்டும் மியான்மரில் இனக்கலவரங்கள் தொடங்கின. அங்கு வாழ்ந்துவந்த ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டார்கள். 280 பேருக்குமேல் கொல்லப்பட்ட வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 1,40.000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இனவாத பெளத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அன்றிலிருந்து இன்று வரை ரோஹிங்கியா மக்களின் நிலை அங்கு படுமோசமாக உள்ளது . இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் சூழ்நிலை உள்ளதால் சிறு படகுகளில் புளி மூட்டை போன்று அடைக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு வருபவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் தர மறுப்பதால் சிறு பிள்ளைகள், கர்ப்பணி பெண்கள் வயோதிகர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டு உயிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. புத்த இனவாத குழுக்களினால் மிரட்டப்பட்டு உயிருக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான ரோஹ்ங்கிய மக்கள் கடல் வழியாக படகுகளில் வெளியேறி வருகின்றனர்.இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர் நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர் இந்நிலையில் உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகியுள்ள‌ ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான குரல்கள் எழும்பி வரும் நிலையில் தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி ‘பர்மாவில் முஸ்லிம்களை கொல்வதை நிறுத்துங்கள்’ என பேஸ்புக் மூலம் ஆதரவு குரல் எழுப்பியுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *