Breaking
Mon. Apr 29th, 2024

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமாகிய அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (31) காலை இடம் பெற்றது.

அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விடயங்கள் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ் நிலைகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி, கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.சனூஸ் , மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள்,அரச உயரதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

Related Post