Breaking
Mon. May 13th, 2024

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வ­தற்கு அந்­நாட்டு மக்­கள் ஆத­ர­வ­ளித்­துள்ள நிலையில், பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து சுதந்­திரம் பெறு­வது தொடர்­பான இரண்­டா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வ­தற்கு பெரு­ம­ளவில் வாய்ப்­புள்­ள­தாக ஸ்கொட்­லாந்து முத­ல­மைச்சர் நிகோலா ஸ்ரேர்­ஜியொன் தெரி­வித்தார்.

ஸ்கொட்­லாந்தின் விருப்­பத்­திற்கு மாறாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளதால் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து பிரி­வ­தற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை அந்தப் பிராந்­தியம் நடத்­து­வது ஜன­நா­யக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்­றென அவர் வலி­யு­றுத்­தினார்.

இதன் பிர­காரம் ஸ்கொட்­லாந்து அர­சாங்கம் பிறி­தொரு சுதந்­திர வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு தயா­ராகி வரு­வ­தாக அவர் கூறினார்.

ஸ்கொட்­லாந்து மக்கள், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வதா அல்­லது இல்­லையா என தீர்­மா­னிக்கும் வாக்கெடுப்பில் 38 சதவீத வாக்குகளுக்கு 62 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக வாக் களித்திருந்தனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *