Breaking
Wed. May 1st, 2024

கைவிரல் ரேகையை மையப்­ப­டுத்­திய புதிய கடவுச் சீட்டும் இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டையும் அடுத்து வரும் இரு ஆண்­டு­களில் அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டாளர் எம்.என்.ரண­சிங்க குறிப்­பிட்டார்.

இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டைக்­கன வேலைகள் ஏற்­க­னவே ஆட்­ப­திவு திணைக்­க­ளத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் புதிய கடவுச் சீட்டை அறி­முகம் செய்யும் வித­மாக அனைத்து வேலைப்­பா­டு­களும் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தற்­போ­துள்ள கடவுச் சீட்­டுக்கள் ஊடாக மோச­டிகள் மிக சூட்­சு­ம­மாக முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் அதனை தடுக்கும் வித­மா­கவே இந்த புதிய கடவுச் சீட்­டுக்கள் வடி­வ­மைக்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.

புதிய கடவுச் சீட்டில் கைவிரல் ரேகையே பிர­தான இடம் வகிக்கும் எனவும் அதனால் விமான நிலை­யத்­தில் தேவை­யற்ற கால தாம­தத்­தையும் தவிர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *