Breaking
Sat. Apr 27th, 2024
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயக முன்னணியின் மூதூர் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் நாளை (30) புதன் கிழமை மாலை 2.00 மணிக்கு கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சஜீத் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெறவுள்ள இம் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Related Post