Breaking
Tue. May 14th, 2024

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

புதிய தேர்தல் முறையை தயா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை உப குழு அறிக்­கையை தயா­ரித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளித்­துள்ள நிலையில் அந்த வரைபு அறிக்­கையே இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் இன்­றைய தினம் அமைச்­ச­ர­வையில் புதிய தேர்தல் முறைக்கு அங்­கீ­காரம் கிடைக்­கு­மி­டத்து வர்த்­த­மானி அறி­வித்­தலில் அதனை வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். பின்னர் புதிய தேர்தல் முறை குறித்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சம­ரப்­பிக்­கப்­படும்.
கடந்­த­வாரம் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது புதிய தேர்தல் முறையை தயா­ரிப்­ப­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்தக் குழுவில் அமைச்­சர்­க­ளான கலா­நிதி சரத் அமு­னு­கம, எஸ்.பி. திசா­நா­யக்க, லக் ஷ்மன் கிரி­யெல்ல, கபிர் ஹஷீம், சம்­பிக்க ரண­வக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கரு­ணா­தி­லக்க, பழனி திகாம்­பரம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் உறுப்­பி­னர்­க­ளாக இடம்­பெற்­றுள்­ளனர்.

இந்­நி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை குறித்த அமைச்­ச­ரவை உப குழுவின் உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கூடி சிறு­பான்மை கட்­சி­களின் யோச­னைகள் குறித்து ஆராய்ந்­தி­ருந்­தனர்.

அந்த சந்­திப்­பின்­போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பல தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. யாழ்ப்­பாண மாவட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற 11 தேர்தல் தொகு­தி­களில் எந்த மாற்­றத்­தையும் செய்­யாமல் அவ்­வாறே விடு­வ­தற்கும் உப­கு­ழு­வினால் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

தேர்தல் முறை மாற்­றத்தைப் பொறுத்­த­வரை இரண்டு தேர்தல் முறை­மைகள் குறித்து பரி­சீ­லிக்­க­ப்­பட்­டு­வந்­தன. முத­லா­வது யோச­னை­யா­னது 196 உறுப்­பி­னர்­களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்­யவும் 59 உறுப்­பி­னர்­களை தேசிய பட்­டியல் ரீதியில் தெரிவு செய்யும் வகை­யிலும் ஆரா­யப்­பட்­டது. அதா­வது விருப்பு வாக்கு முறைமை முற்­றாக நீக்­கப்­ப­டு­கின்ற அதே­வேளை விகி­தா­சார முறைமை நீக்­கப்­ப­டாத முறை­யாக இது காணப்­ப­டு­கின்­றது. இதன்­மூலம் தற்­போது 225 ஆக இருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 255 ஆக உயர்த்­து­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை மற்­று­மொரு தேர்தல் முறை­மையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது தேர்தல் தொகு­தி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் 165 உறுப்­பி­னர்கள், விகி­தா­சார முறை­மையின் பிர­காரம் 90 உறுப்­பி­னர்கள் என்று பகிர்ந்து செல்­லும்­படி இந்த முறை பரி­சீ­லிக்­கப்­பட்­டது. இந்த முறை­மையின் ஊடா­கவும் 255 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு யோசனை பிரே­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. விகி­தா­சார முறைப்­படி தெரிவு செய்­யப்­படும் 90 உறுப்­பி­னர்­களை பொறுத்­த­மட்டில் 66 உறுப்­பி­னர்கள் மாவட்ட ரீதி­யிலும் 24 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல் முறைமையானது சிறு பான்மை அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Veerakesari-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *