Breaking
Fri. May 3rd, 2024

உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மகளிர் அமைப்பின் 13 ஆவது வருட நிறைவு நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையல்,

பிரதேசத்தில் பல முன்னேற்றகரமான செயல்களை செய்யும் பெண்களை கண்டுகொள்ளாத கட்சியினர் தற்போது பெண்களை தேடி தங்கள் காலடிக்கு வரும் நிலைமை வரப்போகின்றது.

இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளின் பெண்களின் முயற்சிதான் அதிகமாக காணப்படுகின்றது. பெண் பிள்ளைகள் தான் அதிகம் கல்வி கற்கின்றார்கள். சிறந்த வேலையை நேரத்திற்கு, தாமதிக்காமல் செய்யக் கூடியவர்கள் என்றெல்லாம் பெண் சமூகம் முன்னேறிக் கொண்டு வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் வாக்காளர்களே தவறுகளை செய்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் நமது வாக்கை நமது பிள்ளைக்கு நல்ல கல்வி போற்ற வேண்டும், நல்லதை தேடிப் பார்க்கும் நீங்கள் தேர்தல் காலங்களில் மட்டும் நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தவறிழைக்கின்றீர்கள்.

தேர்தல் காலங்களில் யார் மக்களுக்கு சேவை செய்வார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தல் காலங்களில் தாய்ரமார்கள் தங்கள் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்திக்கு, வாழ்வதாரத்திற்கு, பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உதவி செய்யக் கூடியவர் யார் என்று விழிப்பாக இருக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி தேர்லுக்கு நாம் அனைவரும் முன்னின்று உழகை;க வேண்டும். வறுமையை காரணம் காட்சி பிள்ளைகளின் கல்விக்கு துரோகம் செய்யாதீர்கள்.

போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாக்களை பாவிக்கும் மாணவர்களை கொண்ட சமூகமான எமது சமூகம் தற்போது மாறி வருகின்றது. பிள்ளைகள் வெளியில் சென்று வரும் போது என்னவாறு வருகின்றார் என்பதை தாய்மார்கள் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு கவனிக்காமல் விட்டால் தங்களால் எதிர்காலத்தில் நல்ல தலைவர்களை, நல்ல பிள்ளைகளை உங்களால் இந்த சமூகத்திற்கு வழங்க முடியாமல் போய் விடும் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *