Breaking
Sun. May 19th, 2024

பொதுபல சேனா அமைப்பின் நிதிச் செயலாளரான வெல்லம்பிட்டியே சுமணதம்ம தேரர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

75 லட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நெருங்கிய சகாவான சுமணதம்ம தேரர் மீது அந்த அமைப்பில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுமணதம்ம தேரர் பேலியகொடவில் உள்ள வீடொன்றில் ஒழிந்திருந்திருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *