Breaking
Tue. May 7th, 2024

பாரா­ளு­மன்­றத்தில் பொது எதி­ர­ணியின் பலம் தேய்­வ­டைந்து வரு­கின்­றது. இதன்­படி மேலும் பலர் விரைவில் தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­க­வுள்­ளனர். இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தாக பொது­நிர்­வாக மற்றும் அரச முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

மேலும் சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட ஆயுதம் தொடர்பில் மாயை உரு­வாக்க முனை­கின்­றனர். பொது எதி­ர­ணியின் தேவைக்கு ஏற்றால் போல் விசா­ர­ணை­களை நாம் நடத்­த­போ­வ­தில்லை. தேசிய ஆடை­யுடன் அன்றி கோர்ட் சூட் அணிந்து ஜெனீவா சென்ற பொது எதி­ர­ணியின் செயல் வெட்க கோடா­னது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேசிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செய்­ற­பட்டு வரும் பொது எதி­ர­ணி­யி­னரின் செயற்­பா­டுகள் தோல்வி அடைந்த வண்­ண­முள்­ளன. இதன்­படி மக்கள் மத்­தியில் தேவை­யற்ற முறையில் பீதியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்­தலில் என்று கூறி­வ­ரு­கின்­றனர். யுத்தம் நிறை­வ­டைந்து முப்­பது வரு­டங்­க­ளா­கி­யுள்­ளன. இதன்­படி வடக்கு பகு­தி­களில் ஆயு­தங்கள் மீட்­பது சக­ஜ­மா­கி­விட்­டது. அது­போன்றே சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட ஆயு­தத்தை வைத்து பொது எதி­ர­ணி­யினர் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இருந்­த­போ­திலும் பொது எதி­ர­ணி­யினர் தேவைக்கு ஏற்றால் போன்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு நாம் தயா­ரில்லை.

ஆரம்­பத்தில் ஜெனீ­வாவை கேவ­ல­மாக கரு­திய பொது எதி­ர­ணி­யினர் தற்­போது தேசிய ஆடை­களை விட்டு அதற்கு பதி­லாக கோட்சூட் அணிந்து ஜெனிவா செல்­கின்­றனர். இது மிகவும் வெட்க கேடான செய­லாகும்.

இந்­நி­லையில் தற்­போது பொது­எ­தி­ர­ணியின் செயற்­பா­டுகள் பாரா­ளு­மன்­றத்தில் தேய்­வ­டைந்து வரு­கின்­றன. எதி­ர­ணியின் எண்­ணிக்­கையும் குறைந்து வரு­கின்­றது. நேற்று முன் தினம் மூன்று பேர் தேசிய அர­சாங்கம் ஆத­ரவு வழங்க முன்­வந்­தனர். இது போன்று இன்னும் பலர் விரைவில் எம்­முடன் இணைந்து கொள்­ள­வுள்னர். இது தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

கட்சி மறுசீரமைப்பு

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏனையவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் முன்னெடுக்கப்படும். யாப்பில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்யப்படும் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *