Breaking
Fri. May 3rd, 2024

தேர்தல் வன்­முறை, வாக்கு மோசடி, தேர்தல் பணி­யா­ளர்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­தமை மற்றும் ஆயு­தத்தைக் காட்டி அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்­டுள்ள மத்­திய மாகாண சபை தவி­சாளர் மஹிந்த அப­யக்­கோ­னுக்கு கண்டி மேல் நீதி­மன்றம் இரண்­டரை வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

இவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­பட்­டி­ருந்­ததன் பேரில் ஆறு மாத கால சிறைத் தண்­ட­னையும் ஏனைய இரு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் தலா ஒரு­வ­ருடம் என்ற ரீதியில் இரண்­டரை வரு­டங்கள் சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

2001 ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்தல் பிர­சார காலத்தின் போது தேர்தல் வாக்­க­ளிப்பு நிலைய பணி­யா­ளர்­களை அச்­சு­றுத்­தி­யமை, வாக்­க­ளர்­க­ளுக்கு இடை­யுறு விளை­வித்­தமை, சட்­ட­வி­ரே­த­மாக ஆயுதம் வைத்­தி­ருந்­தமை மற்றும் சட்­ட­வி­ரோத ஒன்று கூடல்­களை மேற்­கொண்­டமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்கள் இவர் மீது சுமத்­தப்­பட்டு கண்டி மேல் நீதி மன்றில் வழக்கு தொட­ரப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தன.

கலஹா பொலி­ஸாரால் தொட­ரப்­பட்ட மேற்­படி வழக்கில் மஹிந்த அப­யக்கோன் உட்­பட 12பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர். இவர்­களில் 11பேர் வழக்­கு­க­ளி­லி­ருந்து விடு­த­லை­செய்­யப்­பட்ட நிலையில் மஹிந்த அப­யக்கோன் மீது தொடர்ந்தும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தன.

இந்­நி­லையில் நேற்று திங்­கட்­கி­ழமை இவ்­வ­ழக்கின் விசா­ர­ணைகள் கண்டி மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­லக்க முன்­னி­லையில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது அபயக்கோன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.இதேவேளை அபயக்கோன் மீது மேலும் பல விசாரணைகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-VK-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *