Breaking
Tue. May 21st, 2024

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி,  பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார்.

1973ஆம் ஆண்டு இவர், இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆளுநர், தனது கடமைகளை 4 ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொள்வார். tm

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *