Breaking
Mon. May 20th, 2024

இறுதி யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­னவா என தமிழர் தரப்­பி­ன­ருக்கும் சர்­வ­தேச தரப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை தீர்க்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முக்­கிய பொறுப்­பாகும். குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். எனினும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கை கடு­மை­யா­ன­தாக அமையும் என செய்­திகள் வெளி­வந்­துள்ள நிலையில் இலங்­கையின் செயற்­பா­டுகள் எவ்­வா­றா­ன­தாக அமை­ய­வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது பொது­மக்­களின் மனித உரி­மை­களை மீறும் செயற்­பா­டுகள் எவையும் நடந்­துள்­ள­னவா என்­பது தொடர்பில் பாரிய சந்­தேகக் கேள்­விகள் அனைத்து தரப்­பி­னாலும் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இலங்­கையில் தமிழ் பேசும் மக்­களின் சார்பில் கேள்வி எழுப்பும் வேளையில் சர்­வ­தேச அமைப்­பு­க்களும் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழுவும் இலங்கை மீது அழுத்­தங்­களை செலுத்தி வரு­கின்­றன. எனினும் இந்த கேள்­வி­களை சர்­வ­தேச மட்­டத்தில் கொண்டு செல்­வ­தனால் இலங்­கையின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடி­யாது. மாறாக, இலங்­கையின் பிரச்­சி­னை­களை உள்­நாட்டுப் பொறி­மு­றை­களின் மூல­மா­கவே தீர்க்க வேண்டும்.

இன்று சர்­வ­தேச அளவில் செயற்­படும் ஒரு­சில அமைப்­புக்கள் தமது உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு அமைய இலங்­கையில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன. அவற்றை உள்­நாட்டில் கட்­டுப்­ப­டுத்த முடிந்­தாலும் சர்­வ­தேச அளவில் இவர்­க­ளது செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. எனினும் உள்­நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும், சம உரி­மை­க­ளையும் மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொடுப்­பதன் மூல­மாக இலங்­கையின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எட்ட முடியும்.

அதேபோல் மக்­க­ளி­டையே ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்த முடியும். இப்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யினால் இலங்கை மீது முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள விசா­ரணை அறிக்கை எவ்­வா­றா­னது என்­பது தொடர்பில் சரி­யான தக­வல்கள் வெளி­வ­ர­வில்லை. எனினும் இலங்கை மீது செலுத்­தப்­படும் அழுத்­தங்­களை அர­சாங்கம் சமா­ளிக்கும் வகையில் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். தமிழர் தரப்­பி­ன­ருக்கும் சர்­வ­தேச தரப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை தீர்க்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முக்­கிய பொறுப்­பா கும்.
அதேபோல் இலங்­கைக்கு எதி­ராக எழும் சர்­வ­தேச சிக்கல் நிலை­மை­களை சமா­ளித்து நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காப்­பற்ற வேண்­டி­யதும் அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அதேபோல் குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மை­யாயின் பாதிக்­கப்­பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

எனினும் இவை அனைத்தையும் உள் நாட்டு செயற்பாடுகள் மூலமாக கையாள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். உள்ளக விசாரணை பொறிமுறைகளை பலப்படுத்தி அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். அரசாங்கம் அவற்றை சரிவர முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *