Breaking
Sat. May 4th, 2024

பஸ்சில் பயணம் செய்து கொண்­டி­ருக்கும் போது உடல்­ந­லக்­கு­றைவால் உயிரிழந்த மனை­வி யின் சடலத்துடன்  நப­ரொ­ரு­வர் வலுக்­கட்­டா­ய­மாக இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மத்­திய பிர­தேச மாநிலம் தாமோ மாவட்­டத்தை சேர்ந்­தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனை­விக்கு உடல் நலக் குறைவால் பிறந்து 5 நாட்­க­ளே­யான குழந்தை மற்றும் தாய் சனியா பாயுடன் தனியார் பஸ் ஒன்றில் பயணம் மேற்­கொண்­டுள்ளார்.

மனை­வியின் உடல்­நிலை மிகவும் கவ­லைக்­கி­ட­மாக இருந்ததால் அவர் பஸ்ஸில் செல்லும் வழியில் உயி­ரி­ழந்­துள்ளார்.

இதை­ய­றிந்த அந்த பஸ் நடத்­துநர், அந்த குடும்­பத்­தி­னரை பாதி வழி­யி­லேயே வலுக்­கட்­டா­ய­மாக இறக்­கி­விட்டு சென்­றுள்ளார்.

அங்­கி­ருந்து வைத்­தி­ய­சாலைக்கு செல்ல 20 கி.மீ. பயணம் செய்ய வேண்டும் என கூறப்­ப­டு­கி­றது.

இந்தநிலையில் ராம்சிங் அந்த நடத்­து­நரிடம் கெஞ்­சியும் அவர் அவர்­களை பஸ்­ஸி­லி­ருந்து வலுக்­கட்­டா­ய­மாக இறக்கிவிட்­டதால் செய்­வ­த­றி­யாது காட்­டு­ப் ப­கு­தியில் தவித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் ஆகிய இரு சட்­டத்­த­ர­ணிகள் அந்த வழி­யாக சென்­றுள்­ளனர். இவர்­களின் பரி­தாப நிலையை பார்த்து உதவி செய்­துள்­ளனர்.

பின்னர் இச் ­சம்­பவம் குறித்து பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. குறித்த முறைப்பாட்டின் பேரில் பஸ் சாரதி மற்றும் நடத் துநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *