Breaking
Tue. Apr 30th, 2024

மன்னார் மாவட்டத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை 9.30 மணிக்கு, மன்னார் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சட்டவிரோத கடல் அட்டை, காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும்,வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், போக்குவரத்து, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை, கல்வி , சுகாதாரம், மீன்பிடி, நீர்ப்பாசனம்,போக்குவரத்து போன்ற இதர விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு, தீர்வுகளும் எட்டப்பட்டன .

குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post