Breaking
Tue. Apr 30th, 2024

மன் \ அடம்பன் மத்திய மஹா வித்தியாலயத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டு நிகழ்வு இன்று(2019.09.10) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக மடு பிரதேச கல்விப் பணிப்பாளர், மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு செல்லத்தம்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாவட்டப் பணிப்பாளர் முனவ்வர் அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மாந்தை பிரதேச சபை உறுப்பினர்களும் பாடசாலை நிருவாகம் மற்றும் கிராம மக்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post