Breaking
Mon. May 20th, 2024

கலாபம்

தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில்  தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததை பல மலையக ஆய்வாளர்களும்,  மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கிறார்கள்.

இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அபாயப் பகுதியாக முன்னரேயே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் மக்கள் வசித்ததற்கு, அவர்களுக்கு வேறு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாமையே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் இந்திய வம்சாவளிகள் என்பதனால் அரசு இம் மக்களை இது வரைக்கும் சரியான முறையில் கையாளவில்லை என்ற பாரிய மறைமுகமான கேள்வி ஒன்று எழுகின்றது.

இந்த மக்களின் பிரச்சனை இன்று நேற்றல்ல இவர்கள் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது.

இந்த மக்களின் பாரிய மனை பிரச்சனைக்கு ஒரு தீர்வு எடுப்பதற்கு இன்னும் அரசுக்கு நேரம் கிடைக்க வில்லை என்பதே உண்மை.

காரணம் இவர்களை வைத்து அரசாங்கம் புழைப்பு நடத்துவது இந்த மக்களுக்கு தெரியாதான் காரணமே.

இன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் ஏற்றுமதி துறையில் பாரிய பணத்தை சம்பாதிக்கும் ஒரே இடம் மலையகம்.

அரசுக்காக உழைத்து தேய்ந்து போன இம் மக்கள் ஒரு காலமும் தங்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை .

அது போன்று அரசாங்கமும் இவர்களை அடிமை போன்றே பார்த்து வந்துள்ளது .

தற்போது அரசியல்வாதிகள் கூறுகின்றனர் அவர்களுக்கு ஏற்கனவே வேறு இடத்துக்கு செல்லும் படி கூறியதாக கூறுகின்றனர் .

இன்று இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார சக்தியாக இருக்கும் மக்களுக்கு சரியான மனை ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டிய அரசு, அவர்களை கைவிட்டதன் விளைவே இது .

அது போன்று கல்வி வளர்சியிலும் இன்று நல்ல நிலையில் உள்ள மக்கள் ஏன் இதுவரைக்கும் மாயஜால அரசியல்வாதிகளை நம்புகின்றார்கள் என்பது புரியவில்லை .

இன்று மிருகங்களுக்கு இருக்கின்ற மதிப்பு கூட மனிதர்களுக்கு இல்லாமல் போகும் நாடாக இலங்கை மாறி வருகின்றது.

இனி வரும் காலங்களில் இந்த மக்கள் தாங்கள் ஏமாறும் மக்களாக இல்லாமல் சிந்திக்க கூடிய மக்களாக மாற வேண்டும் .

தற்போது அனர்த்தம் வந்ததும் ஓடி வரும் அமைசர்களை சரியான மரியாதை கொடுத்து திருப்பி அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சிந்திக்க வைக்க வேண்டும் உழைத்து தேய்ந்து போன மக்களுக்கு சொந்த வீடு இல்லை.

உழைக்காமல் அரசியல்வாதி என சொல்லும் சொம்பரிகளுக்கு ஆடம்பர வீடு, அடுக்கு மாடி, வெளிநாட்டு வங்கிகளில் பணம், சொகுசு வாகனம், மனிதர்களை வித்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே இது உங்களது குடும்பத்துக்கு நடந்தால் எப்படி இருக்கும் .

இவர்கள் உங்களை கடவுளாக மதிக்கின்றறாக்கள் ஆனால் நீங்கள் அவர்களை அவமதிக்கின்றீர்கள்.

இன்று நீங்கள் வெளிநாடுகளில் சென்று எம்மிடமும் பாரிய ஏற்றுமதி உள்ளது என்று பேசுவதற்கு இவர்களே காரணம்.

இது போன்ற சம்பவங்களுக்கு அரசியல்வாதிகளை விட இந்த மக்களின் தவறே காரணம் .

உங்களது கிராமங்களில் உங்களுக்கு உண்மையாக பணியாற்ற மனித நேயம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்தல் உங்களது கஷ்டம் அவர்களுக்கு புரியும்.

இன்று இந்த துன்பகரமான சம்பவம் இனி மேலும் நடக்காமல் இருக்க வேண்டுமாயின் உங்களது கோரிக்கைகள் சரிவரும் வரைக்கும் உங்களது தொழிலை புறக்கணியுங்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *