Breaking
Sun. May 19th, 2024

பெரிய திரு­ட­னுக்கு வேட்பு மனு வழங்­கி­யுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிறிய திரு­டர்­க­ளுக்கு வேட்பு மனு வழங்­க­வில்­லையாம். இதி­லேயே இவர்­களின் தரத்தை நாம் புரிந்­து­கொள்­ளலாம்.

அடுத்த ஐந்து வரு­டங்­களில் நாட்டை குடும்ப ஆட்சி இல்­லாமல் நாட்டை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் கட்­டி­யெ­ழுப்­புவோம். என்று நிதி­ய­மைச்­சரும் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

பெரும்­பான்மை பல­மற்ற எமது அர­சாங்­கத்­தினால் இவ்­வ­ளவு வேலைத்­திட்­டங்கள் செய்ய முடி­யு­மானால் அடுத்து நீங்கள் தரப்­போ­கின்ற மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பல­முள்ள அர­சாங்­கத்தின் ஊடாக எவ்­வ­ளவு நன்­மை­களை செய்வோம் என்று பாருங்கள். மஹிந்­த­வுக்கு மறக்க முடி­யாத பாடத்தை புகட்­டுவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கண்­டியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என பலர் இந்த முத­லா­வது கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

பெரிய திரு­ட­னுக்கு வேட்பு மனு வழங்­கி­யுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிறிய திரு­டர்­க­ளுக்கு வேட்பு மனு வழங்­க­வில்­லையாம். இதி­லேயே இவர்­களின் தரத்தை நாம் புரிந்­து­கொள்­ளலாம். அடுத்த ஐந்து வரு­டங்­களில் நாட்டை குடும்ப ஆட்சி இல்­லாமல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கட்­டி­யெ­ழுப்­புவோம். முன்­னைய ஆட்­சியில் பாரிய ஊழல் மோச­டி­க­ளு­ட­னேயே அபி­வி­ருத்தி திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட் ­டன.

ஆனால் 100 நாள் திட்­டத்தில் குறித்த மோசடி திட்­டங்­களை சரி­யான முறை யில் ஊழல் இன்றி முன்­னெ­டுத்தோம். கொழும்பு – கண்டி அதி­வேக பாதையின் நிர்­மாணப் பணிகள் மீண்டும் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இது ரணில் விக்­ர­ம­சிங்க ஆரம்­பிக்கும் திட்டம் என்­ப­தனை குறிப்­பி­டு­கின்றோம்.

கடந்த 10 வரு­டங்­களில் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் வழங்க முடி­யாத சலு­கை­க­ளையும் நிவா­ர­ணங்­க­ளையும் வழங்­கி னோம். அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களை குறைத்து அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்தோம்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் சர்­வ­தேச நாடு­க­ளுடன் சிறந்த உறவு காணப்­ப­ட­வில்லை. அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் மற்றும் இந்­தி­யா­வுடன் கடந்த அர­சாங்கம் முரண்­பட்­டது. மோதிக்­கொண்­டி­ருந்­தது. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சியில் சர்­வ­தேச உற­வு­களை மேம்­ப­டுத்தி குறித்த நாடு­களின் உத­வி­க­ளையும் முத­லீ­டு­க­ளையும் இலங்­கைக்கு கொண்டுவர முடிந்­தது.

மஹிந்த அர­சாங்கம் சாதா­ரண மக்கள் மத்­தியில் பாரிய வரி­களை விதித்­தது. ஆனால் எமது அர­சாங்கம் கசினோ போன்ற துறை­க­ளுக்கே வரி விதித்­தது. மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­க­ளையே வழங்­கினோம். பெரும்­பான்மை பல­மற்ற எமது அர­சாங்­கத்­தினால் இவ்­வ­ளவு வேலைத்­திட்­டங்கள் செய்ய முடி­யு­மானால் அடுத்து நீங்கள் தரப்­போ­கின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கத்தின் ஊடாக எவ்வளவு நன்மைகளை செய்வோம் என்று பாருங்கள். மஹிந்தவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்.
ஜனவரி எட்டாம் திகதி புரட்சி செய்தோம். அதேபோன்று இன்னும் 35 நாட்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பெறுவோம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *