Breaking
Sat. May 18th, 2024

மஹிந்த – பசில் மறுக்கவில்லை
தேசத்துரோகத்துக்கு கடும் தண்டனை ;சொத்துக்களை முடக்கி பிரஜாவுரிமையை இரத்துச் செய்யவும் சட்டத்தில் இடம்

அரசியலமைப்பின் 6 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இலங்கைக்குள் தனியான இராஜ்ஜியம் உருவாக்க நிதி உதவி வழங்கும் நபரின் பிரஜா உரிமை 7 வருடங்களுக்கு ரத்துச் செய்யப்படுவதோடு சொத்துக்கள் யாவும் அரசுடமை யாக்கப்படும். இந்த நிலை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் டிரான் அலஸ¤க்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

தான் பிரதமராக இருந்தபோது புலிகளுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டை மஹிந்த ராஜபக்ஷவோ பசில் ராஜபக்ஷவோ இதுவரை நிராகரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், ராடா நிறுவனத்தினூடாக புலிகளுக்கு 169 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு நிதி வழங்கியது தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்தும் விசேட ஊடக மாநாடு நேற்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய சம்பவம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளி எனவும் இந்த கொடுக்கல் வாங்கலை டிரான் அலஸ் சத்தியக் கடதாசி மூலம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். புலிகளுக்கு நிதி வழங்கியது குறித்த சகல ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக கூறிய அமைச்சர் முடிந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்.

2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே பயங்கரவாதிகளுடனான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றது.

புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வடக்கில் தேர்தலை பகிஷ்கரிக்க நடவடிக்கை எடுக்குமாறு டிரான் அலஸ¤க்கு அவர் கோரியிருந்தார். அந்த சமயம் டிரான் அலஸ் சீ. ரீ. பீ. எனும் நிறுவனத்தை நடத்தி வந்ததோடு அதனூடாக வடக்கு கிழக்கில் உள்ள தொலைபேசி நிறுவனங்களுடன் பணியாற்றி வந்தார். புலிகளுடன் தொடர்பு

வைத்திருந்த அவர் தான் பெசில் ராஜபக்ஷ மற்றும் புலி பிரதிநிதி எமில் காந்தன் ஆகியோருடன் பேச்சு நடத்தியதாக சத்தியக் கடதாசி மூலம் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நிதி வழங்கியதாகவும் அதன் மூலம் புலிகள் படகுகளை கொள்வனவு செய்ததாகவும் டிரான் கூறியிருக்கிறார்.

டிரான் அலஸின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து இவை அனைத்தையும் அவர் அம்பலப் படுத்தியிருந்தார்.

புலிகளுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வீடியோ மற்றும் தகவல்கள் தன்னிடம் இருப்பதால் அவற்றை நாசப்படுத்துவதற் காகவே தனது வீட்டை கொள்ளைய டித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரனுடன் நேரடி பேச்சு நடத்து வதாகவே 2005ல் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட் டிருந்தது. 2005 டிசம்பர் 27 ஆம் திகதி நடத்த மாவீரர் தின நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ யதார்த்தமான தலைவர் என பிரபாகரன் கூறியிருந்ததோடு பிரபாகரனை மஹிந்த ராஜபக்ஷ மிஸ்டர் பிரபாகரன் என்றே அழைத்தார். இதன் மூலம் மஹிந்தவின் இரட்டை வேடம் புலனாகிறது.

மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கீழுள்ள அமைச்சின் கீழ் ராடா நிறுவனத்தை உருவாக்கினார். ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கிய ரெப்லா (Reppla) டப்ரன்  (Tafren) டபோர் (Tafor)  ஆகிய நிறுவனங்களை இணைத்து அமைக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணிப்பாளராக டிரான் அலஸ் நியமிக்கப் பட்டார். பீ. அபேகுணவர்தன, திலக் அமுனுகம, சாந்தி பெர்ணாந்து, சாலிய விக்ரமசூரிய ஆகியோர் இதில் தொடர் புபட்டிருந்தனர். ராடா நிறுவனத்திற்கு தேசிய சேமிப்பு வங்கி அபிவிருத்தி அமைச்சு என்பவற்றினூடாக நிதி உதவி வழங்கப்பட்டது.

2005 இல் இவர்கள் கிளிநொச்சிக்குச் சென்று பூவண்ணான் எனும் எல். ரீ.ரீ. ஈ தலைவருடன் 1200 சுனாமி வீடுகள் கட்டும் திட்டம் குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். புலிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட போலி திட்டமே இது. இந்த திட்டத்திற்கு 800 மில்லியன் மதிப்பிடப்பட்டது. ஆனால் இதனை சட்டபூர்வமாக வழங்க முடியாது எனவும் அமைச்சரவை அனுமதி தேவை எனவும் திறைசேரி அதிகாரி கூறியுள்ளார்.

இதனால் அமைச்சரவைக்கு இந்த திட்டம் குறித்து அறிவித்து விட்டு இந்த வீடமைப்பு திட்டத்திற்கு 800 மில்லியன் ரூபாவை ஒதுக்க நிதி அமைச்சராக மஹிந்த நடவடிக்கை எடுத்தார். இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை.

ஜீ. எல். பில்டர்ஸ் என்ட் கன்ஸ்ட்ரக்சன் சீ. என். கே. ஹோல்டிங்ஸ், எவரெஸ்ட் சிவில் இன்ஜினியர் பிரைவட் லிமிடட் ஆகிய 3 நிறுவனங்களினூடாக 800 மில்லியன் ரூபா பணம் பகுதி பகுதியாக வழங்கப்பட்டுள்ளது இந்த நிறுவனங்கள் பெயரளவில் மட்டுமே உள்ளவையாகும்.

2006 இல் மாவில்ஆறு விவகாரம் ஆரம்பமானாலும் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்ந்து இடம்பெற்றது. 2006.06.22 ஆம் திகதி பீ. கே. ஹோல்டிங்ஸ் கணக்கிலிருந்து 100 மில்லியன் ரூபா டிரான் அலஸின் சீ. ரீ. பி. அலுவலகத்தில் வைத்து டிரான் அலஸ¤க்கு வழங்கப் பட்டது. 2006 மே 10 ஆம் திகதி பீ. கே. ஹோல்டிங் கணக்கிலிருந்து 5700,000 ரூபா வழங்கப்பட்டது. மே 30 ஆம் திகதி எவரெஸ்ட் சிவில் இன்ஜினியரிங் சர்விஸ் கணக்கினூடாக 100 இலட்சம் ரூபா பெற்று எமில் சாந்தனுடன் சென்று சீ. ரீ. பி. அலுவலகத்தில் வைத்து டிரான் அலஸ¤க்கு வழங்கப் பட்டிருக்கிறது.

2006 மே 31 ஆம் திகதி எவரெஸ்ட் சிவில் இன்ஜினியர்ஸ் கணக்கில் இருந்து 100 இலட்சம் ரூபா பணம் டிரான் அலஸ¤க்கு வழங்கப்பட்டது. திறைசேரியினூடாக விநியோகிக்கப்பட்ட 169 மில்லியன் ரூபா பணம் ராடா நிறுவனத்தின் மூலம் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவது உகந்ததல்ல. 26 ஆயிரம் படையினரையும் 9 ஆயிரம் பொதுமக்களையும் கொன்ற புலிகளுக்கு நிதி உதவி வழங்கியவர்கள் இன்று மனித உரிமை குறித்து பேசுகின்றனர்.

இலங்கைக்குள் தனியான ராஜ்ஜியம் அமைக்க உதவி வழங்குதல் அதற்கு உதவுதல், நிதி உதவி வழங்குதல் என்பவற்றுடன் தொடர்புள்ள எத்தகைய நபருக்கும் எதிராக அரசியலமைப்பின் பிரகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விசாரணையின் பின்னர் 7 வருடங்கள் பிரஜா உரிமையை ரத்துச் செய்ய முடியும். அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கப்படும். எம்.பியாக இருந்தால் அவரின் பதவிகள் ரத்தாகும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *