Breaking
Wed. May 8th, 2024

இலங்­கையில் மாடுகள் அறுப்­ப­தற்கு எதி­ரான போராட்­டத்தை மீண்டும் ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக சிங்ஹ லே அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த கால அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்து இலட்­சக்­க­ணக்­கா­னோரின் கையொப்­பத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மகஜர் ஒன்­றினைச் சமர்ப்­பித்தும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை அவர் மேற்­கொள்­ள­வில்லை என அவ்­வ­மைப்பு குற்றம்சாட்­டி­யுள்­ளது.

மாடுகள் அறுப்­ப­தற்கு எதி­ரான சிங்ஹ லே அமைப்பின் கோரிக்­கை­களை மீண்டும் ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை விரைவில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக சிங்கள ராவய அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிங்ஹ லே அமைப்பின் செய­லாளருமான மெதில்லே பஞ்­சா­லோக தேரர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, மாடு அறுப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பேராட்­டத்தில் பௌத்த குரு­வொ­ருவர் தீ வைத்­துக்­கொண்டு உயி­ரி­ழந்தார்.

போவத்தே இந்­திர ரத்ன தேரர் கண்­டியில் இவ்­வாறு உயிர்த் தியாகம் செய்து கொண்ட பின்பு கூட அர­சாங்கம் மாடு அறுப்­பதை நிறுத்­து­வ­தற்கு எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. அதனால் விரைவில் மீண்டும் எமது போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

மாட்­டி­றைச்சி உண்­பதைத் தடுக்க நாம் விரும்­ப­வில்லை. அவ்­வாறு உண்­பது அவர்­களின் உரி­மை­யாகும். அதனால் மாட்­டி­றைச்சி உண்ணும் முஸ்­லிம்கள் மற்றும் ஏனைய மக்­களின் மாட்­டி­றைச்சி தேவையை நிறை­வேற்­ற­வ­தற்­காக அர­சாங்கம் வெளி நாட்­டி­லி­ருந்து இறைச்­சியை இறக்­கு­மதி செய்ய வேண்டும் எனக் கோர­வுள்ளோம்.

எமது இந்த எதிர்ப்பு போராட்­டத்தில் இந்து மற்றும் ஏனைய மக்­களின் ஆத­ர­வையும் பெற்று அவர்­க­ளையும் இணைத்­துக்­கொள்­ள­வுள்ளோம். இந்து மதத்­த­வர்கள் மாடு­களை தமது தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள்.

பௌத்­தர்கள் நாம் எமக்கு பால் புகட்டும் தாயின் அடுத்த ஸ்தானத்தில் பசு­மா­டு­களைக் கரு­து­கின்றோம். அதனால் மாடுகள் அறுக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற கொள்­கை­யு­டை­ய­வர்­க­ளாக இருக்கிறோம்.

இலங்கையில் தினம் 5 ஆயிரம் மாடுகள் அறுக்கப்படுகின்றன. பௌத்த நாடான இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவதைத் தடை செய்யும்படி ஜனாதிபதியைக் கோரவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். (VIDIVELLI)

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *