Breaking
Sat. May 18th, 2024

இலங்­கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் இரு தினங்கள் மாத்திரமே எம்.பி.யாக­வி­ருந்த ஜே.வி.பி.யின் தேசியப் பட்­டியல் எம்.பி.யான சரத் மாயா­துன்ன நேற்று கன்னி உரை­யொன்றை நிகழ்த்தி விட்டு எம்.பி பத­வியை இரா­ஜி­னாமா செய்துகொண்டதையடுத்து அவருடைய இடத்துக்கு பிமல் ரட்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிமல் ரட்நாயக்க தேசியப் பட்டியல் உறுப்பினராக  ஜேவிபி நியமித்துள்ளது.

நாட்டில் இடம்­பெறும் ஊழல்­க­ளுக்கு எதி­ராக போராடும் கட்சி யாக ஜே.வி.பி. உள்­ளது. அக்­கட்­சி­யினர் இம்­முறை தேர்­தலின் போது கூட நாட்டில் ஊழலை ஒழிக்க மக்­களின் ஆணையை கோரி­னார்கள்.

ஆனால் மக்கள் அதற்­கான பூரண அங்­கீ­கா­ரத்தை வழங்­க­வில்லை. தபால் மூல வாக்­க­ளிப்பு அரச ஊழி­யர்­க­ளுக்­கா­னது. அவர்கள் கூட ஜே.வி.பியை அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அதா­வது ஊழல்கள் தொடர்பில் மக்கள் பெரி­தாக அக்­கறை கொள்­ளாத நிலையே உள்­ளது.

எனவே நான் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தொடர்­வ­தற்கு விரும்­ப­வில்லை. எனது இந்த ராஜி­னாமா கூட ஊழல்­க­ளுக்கு எதி­ரா­ன­தா­கவே உள்­ளது என சரத் மாயா­துன்ன நேற்று சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *