Breaking
Fri. May 3rd, 2024
-BBC-
அமெரிக்காவின் கென்டகி மாநிலத்திலுள்ள, மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லில் அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள முகமது அலியின் இறுதி சடங்கு
இந்த உலகின் ஒரு குடிமகனான வாழ்ந்த முகமது அலி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தனது இறுதி சடங்கில் சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்து பலதரபட்ட மக்களும் கலந்து கொள்ள விரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
குறிப்பிடப்படாத இயற்கை காரணங்களால் குருதியில் நச்சுத் தன்மை உண்டானதால் முகமது அலி இறந்து விட்டதாக முகமது அலியின் குடும்ப செய்தி தொடர்பாளர் பாப் கன்னல் தெரிவித்துள்ளார்.
முகமது அலியின் இறுதி சடங்கு, அவரே திட்டமிட்டிருந்தபடி பல்மத தன்மையில் இருக்கும் என்றும், ஆனால் அவரது நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு இஸ்லாமிய முறைப்படி அமையும் என்று கூறப்படுகிறது.
74 வயதில் மரணமடைந்த குத்துச்சண்டை அதிக எடை பிரிவின் மூன்று முறை சாம்பியனான முகமது அலியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கலந்து கொண்டு, மறைந்த முகமது அலிக்கு புகழாரம் சூட்டவுள்ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *