Breaking
Tue. May 14th, 2024

வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களின் பிர­தா­னி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் ஆட்­சி­யா­ளர்­க­ளது முதன்மைக் குடும்­பத்து உற­வி­னர்கள் பாரிய நிதி மோச­டி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். தூது­வ­ரா­ல­யங்­க­ளுக்கு சொந்­த­மான கட்­ட­டங்­களை விற்­பனை செய்து அந்தப் பணத்தை தங்­க­ளது சொந்த வங்கிக் கணக்கில் வைப்­பி­லிட்­டுள்­ள­மைக்­கான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தினேஷ் குண­வர்­த­ன­ எம்.பி. யினால் முன்­வைக்­கப்­பட்ட வெளி­நாட்டு உடன்­ப­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்ட பத்து நாடுகள் தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் மங்­கள சம­ர­வீர இங்கு மேலும் கூறு­கையில்;

பத்து இலட்சம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வதே அர­சாங்­கத்தின் இலக்­காகும். இதனை பிர­தமர் மிகத் தெளி­வாக இந்த சபையில் கூறி­யி­ருந்தார். அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் 2020 ஆம் ஆண்­ட­ளவில் இந்த இலக்­கினை அடைந்து கொள்­வ­தற்கு அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கி­றது. 2009 முதல் 2015 வரை­யான காலப்­ப­கு­தியில் இந்­நாட்டில் எந்­த­வொரு வேலை­வாய்ப்­பிற்கும் வழி­வ­குக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. எனினும் தற்­போது நாம் அதனை மாற்­றி­ய­மைத்து வரு­கிறோம். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் ஏற்­று­ம­தி­யா­னது 16.7 வீத­மாக குறை­வ­டைந்து காணப்­பட்­டது.

உலகப் பொரு­ளா­தா­ரத்­தோடு நாம் பய­ணிக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம். அந்த வகையில் உலகப் பொரு­ளா­தார போட்­டித்­தன்­மைக்கு இலங்கை மிடுக்­குடன் நடை­போட வேண்டும் என்­ப­தையே விரும்­பு­கிறோம். அவ்­வா­றா­ன­தொரு நிலை­மையின் போது எவ்­வாறு நாம் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­களை உள்­வாங்கிச் செயற்­ப­டு­வது என்­பது குறித்து சிந்­திக்­க­வேண்டும்.

இன்­றைய நிலையில் இலங்கை அர­சாங்­க­மா­னது ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­டனும் அமெ­ரிக்­கா­வு­டனும் பொரு­ளா­தார உற­வு­களைப் பேணி வரு­கின்­றது.

நாம் மிகவும் சரி­யான பாதை­யி­லேயே பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம் என்­பதும் நிரூ­ப­ண­மா­கி­யி­ருக்­கின்­றது.

சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்கள் நம்­பிக்­கை­யுடன் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்­கான சூழலை நாம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம்.

சீனாவைப் பொறுத்த வரையில் அந்­நாடு 138 வெளி­நாட்டு உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ள அதே­வேளை இந்­தியா 97, வியட்நாம் 81 என்ற ரீதியில் முத­லீட்டு ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்டு தமது நாட்டு பொரு­ளா­தா­ரங்­களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்­கின்­றன.

மேற்­போன்ற நாடுகள் இவ்­வாறு உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொண்டு பொரு­ளா­தா­ரத்தில் அக்­கறை கொண்­டுள்ள அதே­வேளை எமது நாடா­னது வெறும் 28 உடன்­ப­டிக்­கை­க­ளையே கைச்­சாத்­திட்­டி­ருக்­கின்­றது.

எமது நாட்டை விட மேற்­கூ­றப்­பட்ட நாடுகள் முன்­னிலை வகிக்­கின்­றன. எனினும் தற்­போது நாம் இந்­நி­லை­மை­களை மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கின்றோம். தற்­போது நாம் 40 உடன்­ப­டிக்­கை­க­ளாக அதி­க­ரித்­தி­ருக்­கின்றோம். இலங்­கை­யா­னது ஆடை மற்றும் தேயிலை ஏற்­று­ம­தி­களில் மாத்­திரம் தங்­கி­யி­ருத்­தலில் இருந்து விடு­பட்டு வெளியில் வர­வேண்­டிய கட்­டாயம் எழுந்­தி­ருக்­கின்­றது. நாம் மூடிய பொரு­ளா­தா­ரத்தில் தொடர்ந்தும் நிலைத்­தி­ருக்க முடி­யாது.

மேலும் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் ஆட்­சிக்­கா­லத்தில் இருந்து வந்த 67 வெளி­நாட்டுத் தூது­வ­ரா­ல­யங்­களில் 15 உத்­தி­யோ­கத்­தர்­களே அரச நிய­ம­னத்தின் ஊடாக சென்றிருந்தனர். ஏனைய அனைத்து நிய­ம­னங்­களும் அர­சியல் நிய­ம­னங்­க­ளா­கவே இருந்­தன.

முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளது முதன்மைக் குடும்­பத்து உற­வி­னர்­களே இவ்­வாறு அர­சியல் நிய­மனம் பெற்­றி­ருந்­தனர். இவ்­வாறு அர­சியல் நிய­மனம் பெற்­ற­வர்கள் பாரிய நிதி­மோ­ச­டி­களில் ஈடு­பட்­டுள்­ளமை மற்றும் வெளி­நாட்டுத் தூது­வ­ரா­ல­யங்­க­ளுக்குச் சொந்­த­மான கட்­ட­டங்­களை விற்பனை செய்து அந்த பணத்தை தமது சொந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளமை போன்ற தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வெளிநாட்டுத் தூதுவராலய பிரதானிகளின் எண்ணிக்கையை 15 இலிருந்து 34ஆக அதிகரித்துள்ளோம். நன்கு கற்றுத் தேர்ந்த அனுபவமுடையவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி வெளிநாட்டுத் தூதுவராலயங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *