Breaking
Sun. Apr 28th, 2024

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரலிய திட்ட ஒதுக்கீட்டில் இருந்து ரூபாய் 1.5 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சாவற்கட்டு கிராமத்திற்கான கிராமத்தகத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் வடிவுக்கரசி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட விதியினை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மன்னார் நகர சபை உறுப்பினர் உவைஸுல் ஹரிணி மீள்குடியேற்ற செயலணி மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் மன்னார் நகர சபை தேர்தல் வேற்பாளர் வேங்கை மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post